articles

தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடு தலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழகத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பல முறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்க ளோடு மக்களாக தொண்டால் பொழுத ளந்த தூய்மையான தலைவர். தமிழ கத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வ தற்கு தனது வாழ்நாளை அர்ப்ப ணித்தவர்.

தோழர் என். சங்கரய்யா அவர்களது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக் கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக் கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி, மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி